மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள்





ஏறாவூர் எஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்எம் ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம.; ஹிஸ்புல்லா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்எஸ். சுபைர் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏஎஸ். இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மாணவர்களது கலைநிகழ்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன்;; பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது நிலவும் வளப்பற்றாக்குறையினை முழுமையாக நிவர்த்தி செய்ய தேவையான நிதி அடுத்த வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்படுமென இங்கு உரைநிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -