எம் சமூகத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பல்வேறு யாப்பு ரீதியான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்ட போதெல்லாம் தைரியமாக நம் சமூகத்துக்காக அச்சமின்றி குரல் கொடுக்கும் ஆளுமையுள்ள ஒரு தலைவனை இந்த சமூகத்துக்கு வழங்கியமைக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்,
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் தமது பல்வேறு முக்கியமான தருணங்களை ஹாஜரா உம்மாவின் துஆ உடனேயே ஆரம்பித்த சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் எங்கள்உள்ளங்களும் கலங்குகின்றன,
தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடியான காலகட்டங்கள் வந்த போதிலும் ஹாஜரா உம்மா வழங்கிய தைரியமும் ஊக்குமுமே அவரை இன்று சர்வதேசம் போற்றும் ஒரு தலைவராக உருவாக்கியுள்ளது,
அத்தகையதொரு உயர்ந்த தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதை நாம் அறிவோம்.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜியானி ஹாஜரா உம்மாவை பொருந்திக் கொண்டு அவரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்
கிழக்கு முதலமைச்சர்
அல் ஹாபிழ் நசீர் அஹமட்