மாகாண சபைத் தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க மாகாண சபைகளின் அனுமதி அவசியமில்லை என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தீர்மானத்தை சபைக்கு அறிவிக்கும் போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபையில் பதற்ற நிலை உருவாகியதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் விளக்கம் வழங்கப்பட்டதை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் கூடியமை குறிப்பிடத்தக்கது. (DC)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -