தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு டெங்கு பரிசோதனைகள் ஆரம்பம்.

ஜுனைட்.எம்.பஹ்த்-

தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை காத்தான்குடி சுகாதார வைத்திய பிரிவில் உள்ள வீடுகள் பொது இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் களம் இறங்கவுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை டெங்கு நுளம்பு உற்பத்தி ஆகாத வகையில் சுத்தமாக வைத்திருப்பதுடன் பரிசோதனைக்காக வரும் அதிகாரிகளுக்கு கடமையை சரிவரச்செய்வதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் U.L.M.நஸ்ரூத்தீன் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -