முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களின் மறைவுக்கு முபீன் அனுதாபம்..!

ஆதிப் அஹமட்-
முன்னாள் அமைச்சரும் தலைசிறந்த அரசியல் வாதியுமான ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் மரணம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்ப்பட்ட பேரிழப்பாகும்.கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மூத்த தலைமையான அன்னார் சொல்லிலும் செயலிலும் தூய்மையானவராக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு அரசியலில் முழுமையாக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு யுக புருஷராவார்.முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்லாது தமிழ் பேசும் மக்களுக்காக சிறப்பாக செயற்படக்கூடிய வல்லமையை இனங்கண்டு அவர் யுத்தம் நிலவிய பல்வேறு பிரதேசங்களில் அபிவிருத்திக்கு பொறுப்பானவராக அப்போதைய அரசாங்கம் நியமித்தது.மேலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முன்னிருப்புக்காக பல்வேறு பணிகளை அவர் ஆற்றியமையை இன்றும் மக்கள் நினைவு கூறுகின்றனர்.

அவரை பிரிந்து அல்லலுறும் அவரின் குடும்பத்துக்கு அல்லாஹ் பொறுமையை வழங்குவதோடு அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் தன்னுடைய அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -