பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் NFGG சந்திப்பு

NFGG ஊடகப் பிரிவு-

சிறுபான்மை மக்களுக்கெதிராக அதிகரித்து வரும் இனவாத நடவடிக்கைகளையும், பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுக்கும் நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) எடுத்து வருகிறது.


இந்தத் தொடரில், பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இன்று (30.05.2017) மதியம் இடம்பெற்றது. உயர் ஸ்தானிகராலய கொழும்பு காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும், சர்வதேச சமூகம் முன்னெடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


இந்த சந்திப்பில் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன், நல்லாட்சிக்கானதேசிய முன்னணி சார்பாக அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரதித் தலைவர் சிராஜ் மஷ்ஹூர், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ், தலைமைத்துவ சபை உறுப்பினர் ஜவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -