க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஆலமரத்திற்கு அருகாமையில் 01.04.2017 அன்று காலை 11.00 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் பலியானதுடன் மேலும் ஏழு பேர் நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் லொறி விபத்துக்குள்ளான பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
ராகல பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் ரதல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாமல் ஏற்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.