எதிர் கூட்டணியின் சாத்­தி­யப்­பா­டு­கள்



இப்னு ஜப்­பார்-
ரச்சின்னம் முஸ்லிம் காங்­கி­ரஸின் அடை­யா­ள­மாக இரு­ப்­ப­த­னால் என்­னவோ, அதில் கிளை­க­ளாக இருந்­த பலர் அதைக்­ கத்­த­ரித்து, பதி­ய­மிட்டு புதிய சிறு­சிறு கன்­று­க­ளாக அங்­கு­மிங்கும் வளர்ந்­து கிடக்­கின்­றனர். கட்சியின் மறைந்த ஸ்தா­பகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தலை­வ­ராக இருக்­கும் ­நே­ரத்தில், கட்­சி­­யுடன் முரண்­பட்­ட பலரை சட்டைக் கொ­லரில் பிடித்த வெளியில் போட்­டி­ருக்­கி­றார். ஆனால், ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான கட்­சியில் பலர், கோபித்­துக்­கொண்­டுதான் வெளியே போயி­ருக்­கி­றார். முன்னார் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் தூக்­கி­யெ­றி­யப்­ப­ட­வில்லை. இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டி­ரு­ப்­பது வேறு­க­தை. ஹஸன் அலியும் தூக்­கி­யெ­றி­யப்­ப­ட­வில்லை. அவர் கட்­சி­யுடன் கோபித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்.

முஸ்லிம் காங்­கி­ர­­ஸைப் பொறுத்­த­வரை, உள்­வீட்டுச் சண்டை பிடிப்­ப­வர்கள் அதற்கு தாரா­ள­மாக இருக்­கின்­றனர் என்­பது வௌ்ளி­டை­மலை. அந்­த­ள­வு அவர்­க­ளுக்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தன்­மூ­லம், ரவூப் ஹக்கீம் மென்­மைத்­தன்மை உடை­ய­வ­ராக இன்றும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கிறார். இது­கு­றித்து, நிந்­தவூரில் நடை­பெ­ற்ற இரு­வேறு கூட்­டங்க­ளில் ரவூப் ஹக்கீம் கூறும்­போ­து, "சாது மிரண்­டால்", "நான் பிரம்பு எடுத்தால் கட்­சியில் யாரும் இருக்­க­மாட்­டார்­கள்" என்ற வார்த்தைப் பிர­யோ­கங்­களை கையாண்டார். எதற்கும் ஒரு எல்லையுண்டு என்­ப­தையே அந்த வார்த்­தைகள் மூலம் அவர் சொல்ல விளைந்­தி­ருக்­கி­றார்.


தலைமை என்­பவர் செவி­டனாகவும், குரு­ட­னா­கவும் இருக்­க­வேண்டும் என்று அஷ்ரப் கூறிய நிபந்­த­னை­­யை ஹக்கீம் சில இடங்­களில் மீறி­யி­ருக்­கிறார். கட்­சியை குழப்பும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­போது சிலர்­மீது கடிந்­து­கொள்ளும் வழக்கம் அவருக்கு இருக்­கி­றது. இதனால், உயர்­­பீ­டத்தில் இரு­ப்­ப­வர்­களே எதி­ரி­க­ளாக சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்ற சம்­ப­வங்­களும் நடந்­துள்­ளன. இந்த எதிர்ப்­பு­க­ளுக்குப் பின்­னால் அவ­ர­வர்­களின் தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் இரு­ப்­ப­தையும் மறுப்­ப­திற்­கில்­லை.


ஒரு ­வ­ண்­டியை இரண்டு மாடுகள் சேர்ந்­தி­ழுப்­பது போன்றே ரவூப் ஹக்­கீமும், ஹஸன் அலியும் கட்­சியை வழி­ந­டாத்திக்­கொண்­டி­ருந்தனர். இதன்­போது, காலப்­போக்கில் இருவரின் கருத்­து­களும் அடிக்­கடி முரண்­படத் தொடங்­கின. ஒரு மாடு தண்­ணிக்கு இழுத்தால் மற்­றது தவிட்­டுக்கு இழுக்­கின்ற கதை­யா­கத்தான் தலைவர் பத­வியும், செய­லாளர் பத­வியும் காணப்­பட்­டன. ஊட­கங்­க­ளுக்கு செய்­தி­களை வழங்­கும்­போ­து­கூ­ட, ஒரு­வர் சொல்லும் விடயம் இன்­னொ­ரு­வ­ருக்கு தெரி­யாத பிறழ்­வுநிலையே காணப்­பட்­டது.


தலை­வ­ரி­னதும், செய­லா­ள­ரி­ன­தும் பய­ணிப்­பு­களும் வெவ்­வேறு திசை­களில் இருப்­பது கட்­சிக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இத­னா­லேயே ஒரே பாதை­யில் பய­ணிக்­கின்ற ஒரு செய­லா­ளரின் தேவை உணரப்­பட்­டது. இத­னா­லே­யே, கண்டி பேராளர் மாநாட்டில் வைத்து மன்சூர் ஏ. காதிர் உயர்­பீட செய­லா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருந்தார். இருந்­தாலும், ஹஸன் அலி அதிகாரங்கள் குறைக்­கப்­பட்­ட செய­லா­ளராக இருந்­து­வந்தார்.

தற்­போது செய­லா­­ளரை நியக்கும் அதி­காரம் தற்போது தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், அந்த செய­லாளரை தலை­யாட்டி பொம்­­­மையாக இருந்தால் அவரை நீக்கும் அதி­காரம் கட்­சியின் உயர்­பீ­டத்­துக்கு இருக்­கி­ற­து. இந்த நடை­மு­றைதான் ஐக்­கிய தேசியக் கட்சி­யி­லும் பின்­பற்­றப்­ப­ட்டு வரு­வ­து குறிப்­பி­டத்­தக்­க­து.

ஹஸன் அலிக்கு தேசி­யப்­பட்­டியல் ஆசனம் வழங்­கு­வ­தற்­கு ஹக்கீம் இணக்கம் தெரி­வித்­தி­ருந்த நிலையில், அதி­கா­ர­­முள்ள செய­லாளர் பத­வியும், தேசி­யப்­பட்­டி­யலும் வேண்டும் என்று கேட்­டி­ருந்தார். ஆனால், செய­லாளர் பத­வியை கொடுக்க விரும்­பாத ரவூப் ஹக்கீம், தேசி­யப்­பட்­டி­யலை வழங்குவ­தற்­கு தயா­ராகவே இருந்­தார், இருக்­கிறார். இது­கு­றித்து ஹஸன் அலி­யுடன் கட்சி சார்­பாக பலர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யிருந்­த­னர். தேசி­யப்­பட்­டி­யலை மட்டும் ஏற்க விரும்­பிய ஹஸன் அலி, பின்னர் அதனை மறுத்­தி­ருந்தார். இதன்­மூலம் அவரின் பின்னால் ஏதோ­வொரு சக்தி இருக்கி­றதோ என்ற சந்­தே­கம் எழு­கின்­ற­து.

ஹஸன் அலியின் செய­லாளர் பதவி வறி­தாக்­கப்­பட்ட பின்னர், அவ­ரது மக­ன் உள்­ள­டங்­கிய குழு­வினர் "கிழக்கின் எழுச்­சி" என்ற கோசத்தை முன்­னெ­டுத்து வந்­தனர். முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைத்­துவம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவேண்டும் என்ற கோசத்­துடன் கிளம்­பிய கிழக்கின் எழுச்­சி, ஹஸன் அலி கட்­சி­யுடன் மீண்டும் இணைந்து செயற்­ப­டத்­­தொ­டங்­கி­ய­போது, அடக்கி வாசிக்கத் தொடங்­கி­ய­து.

புத்­தளம் முன்னாள் நக­ர­பிதா கே.ஏ. பாயிஸ் புத்­த­ளத்­தில் திறந்துவைத்த கட்சிக் காரி­யா­ல­யத்தை நிர்­வ­கிக்கும் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட ஹஸன் அலி, புத்­தளம் நுஹ்மான் வர­வேற்பு மண்­ட­பத்தில் நடை­பெற்ற கட்­சியின் எதிர்­கால செய­ற்­பா­டுகள் சம்­பந்­த­மான கலந்­து­ரை­யா­டலில் பழைய மனஸ்­தா­பங்­களை மறந்து, கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக உரை­யாற்­றி­யி­ருந்­தார்.

இந்­நி­லையில் கடை­சி­யாக நடை­பெற்ற கட்­டாய உச்­ச­பீடக் கூட்­டத்­தின்­போது, கட்­சியின் செய­லாளர் பதவி கிழக்கு மாகா­ணத்­துக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும், அவ­ருக்கு தேசி­யப்­பட்­டியல் நிய­ம­னமும் வழங்­கப்­ப­ட­வேண்டும் அத்­துடன் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சு பத­வியும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்­கை­களை ஹஸன் அலி முன்­வைத்தார். இதை தனக்­குத்தான் வழங்­க­வேண்டும் என்­பதை அவர் சூசு­க­மாக தெரி­வித்­தி­ரு­ந்தார்.

ஆனால், தேசி­யப்­பட்­டியலை வழங்­கு­வ­தற்கு மாத்­தி­ரமே ஹக்கீம் இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில், செய­லாளர் பத­விக்கு பதி­லாக தவி­சாளர் பத­வியை பெற்­றுக்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்தும் ஹஸன் அலி அதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஹஸன் அலி வருவார் என்ற நம்­பிக்­கையில் அட்­டா­ளைச்­சே­னைக்கு தேசி­யப்­பட்­டி­யலை வழங்­காமல் ரவூப் ஹக்கீம் இன்னும் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். கூடவே தவி­சாளர் பத­வியும் வெற்­றி­ட­மாக வைக்­கப்­பட்­டுள்­ள­து.

இந்­நி­லையில் பஷீரால் இயக்­கப்­ப­டு­ப­வர்கள் என்று கூறப்­படும் மு.கா. முக்­கி­யஸ்­தர்கள் பல­ரின் அனு­ச­ர­ணை­யுடன் ஹஸன் அலி, தலை­வ­ரால் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீதி குறித்­து உயைாற்­றினார். கடை­சி­யாக ரவூப் ஹக்­கீம்தான் தலைவர் என்றும் அவரை திருத்­து­வ­தற்­கா­கவே அன்றி, மாற்­று­வ­தற்­காக இந்தக் கூட்டம் நடாத்­தப்­ப­ட­வில்லை என்று ஹஸன் அலி கூறி­யதும் ஏற்­பாட்டா­ளர்கள், கட்சி இரண்­டாக பிள­வு­படும் என்று மேடை முன்னால் குழு­மி­யி­ருந்த மு.கா. அதி­ருப்­தி­யா­ளர்கள், மாற்­றுக்­கட்­சிக்­கா­ரர்கள் என அனை­வ­ரு­மே மூக்­கு­டை­பட்டுப் போனார்கள்.

நிந்­தவூர் முன்னாள் தவி­சாளர் தாஹிர் தலை­மை­யில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தை அட்­டா­ளைச்­சேனை முன்னாள் தவி­சாளர் அன்சில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார். பால­முனை தேசிய மாநாட்­டுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கட்சியின் மேடை மற்றும் கொடி­களை இந்தக் கூட்­டத்­துக்கு அன்சில் பயன்­ப­டுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­க­து. ஹஸன் அலிக்கு தேசி­யப்­பட்­டியல் கொடுக்­கக்­கூ­டாது என்று தலை­வ­ரிடம் கூறி­ய­வர்­க­ளே, இன்று அவ­ருக்­காக குரல்­கொ­டுக்கும் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­வ­தா­னது நகைப்­பு­க்­கு­ரிய விட­யம். 

மறுநாள் ஹஸன் அலி சகோ­தரர் ஜப்பார் அலி அதே நிந்­த­வூரில் ஹக்­கீமை அழைத்து ஒரு கூட்­டத்தை நடாத்­தி­யி­ருந்தார். "ஹஸன் அலி மன­வே­த­னை­யுடன் இருக்­கிறார். அவர் கூட்டம் நடத்­து­வதை அமோ­திக்­கிறேன். ஆனால், சிலர் அவரை பகடை­யாக வைத்து சித்து விளை­யாட்டுக் காட்­டு­வதை அனு­ம­திக்க முடி­யா­து என்று ரவூப் ஹக்கீம் இந்தக் கூட்­டத்­தில் பேசி­யி­ரு­ந்­தார்.

ஹஸன் அலி மற்றும் ரவூப் ஹக்கீம் இரு­வரின் கூற்­றையும் வைத்துப் பார்க்­கும்­போது, இரு­வரும் மோதிக்­கொள்­ள­வில்லை என்­பது தெளிவாக விங்­கு­கின்­ற­து. ஆனால், இதன் பின்­ன­ணியில் சில மு.கா. அதி­ருப்­தி­யா­ளர்கள் இருப்­பதை சொல்­லித்தான் தெரி­ய­வேண்டும் என்­ப­தில்லை. ஹஸன் அலியின் கூட்­டத்தை மு.கா. அதி­ருப்­தி­யா­ளர்கள் கொண்­டா­டி­னார்­களோ இல்­லையோ, மாற்­றுக்­கட்சிக் காரர்கள் தலையில் வைத்துக் கொண்­டா­டி­னார்.

ரவூப் ஹக்­கீமை பொறுத்­த­வரை, அவர் ஹஸன் அலியை இன்னும் உயர்­வா­கவே மதிக்­கிறார் என்­பது அவ­ரது செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து விளங்­கு­கின்­றது. நடப்பாண்­டுக்­கான உயர்­பீட உறுப்­பி­னர்­களின் பெயர்­களை அறி­வித்த அவர், அதை முழு­மை­யாக அறி­விக்­காமல் இன்னும் சில­ருக்கு இடங்­களை வைத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். அதில் ஹஸன் அலியின் பெயரும் இரு­ப்­ப­தாக ஒரு தகவல். ஹஸன் அலி வெறு­­ம­னே உயர்­பீட உறுப்­பி­ன­ராக வரு­வதை விரும்­பாமல், தவி­சாளர் பத­வி­யை கொடுத்து அவரை அலங்­க­ரித்து வைப்ப­தற்­காக காத்­தி­ரு­க்­கிறார். பஷீ­ருக்கு மூடப்­பட்டி­ருக்கும் கதவு ஹஸன் அலிக்­காக திறந்­தி­ருக்­கி­ற­து.

கட்­சி­யினால் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள பஷீர் சேகு­தாவூத் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு எதி­ராக ஒரு கூட்­ட­ணியை அமைப்­ப­தற்கு அழைப்பு விடுத்­து­வ­ரு­கிறார். திரை­ம­றைவில் ஏனைய முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­டனும் இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுக்­­கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில், பஷீர் சேகு­தாவூத் ஹஸன் அலியின் நிந்­தவூர் மேடையில் ஏறுவார் என்று பலர் காத்­தி­ருந்­தாலும் அது நடை­பெ­ற­வில்லை. அப்­படி நடந்­தி­ருந்தால், இரு­வரும் தேசி­யப்­பட்­டியல் கிடைக்­காத கார­ணத்­தி­னால்தான் கட்­சிக்கு எதி­ராக போர்க்­­கொடி தூக்­கி­யி­ருக்­கி­றார்கள் என்­பதை அவர்­க­ளாக வாக்­கு­மூலம் கொடுப்­ப­தாக அது அமைந்­து­வி­டும்.

ஆனாலும், பஷீர் சேகு­தாவூதின் தூது­வர்கள் நிந்­தவூர் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ரு­ந்­த­னர். பஷீரும் ஹஸன் அலியும் பொது­வெளியில் ஒன்­று­சேர்ந்­தால் அவர்­க­ளது போ­ராட்டத்தை அவர்­க­ளா­கவே மலி­னப்­ப­டுத்­துவ­தாக அமைந்­து­விடும். அதை இவர்கள் இப்­போதைக்கு செய்­வார்கள் என்றும் எதிர்­பார்க்க­வும் முடி­யாது. ஹஸன் அலி தனக்­கு­ரி­யது கிடை­த்தால் ஒதுங்­கி­வி­டும் நிலையில் இருக்­கி­றார். ஆனால், பஷீர் பலி­வாங்கும் படத்தில் இரு­க்­கி­றார். இந்­நி­லையில் இரு­வரும் கூட்­டி­ணை­வது என்­பதும் இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கத்தான் இருக்­கி­ற­து.

கூட்டு எதிர்க்­கட்சி மூலம் பஷீர் சாதிக்க நினைக்கும் விட­யங்கள் யாருக்கும் தெரி­யா­ம­லில்லை. தனக்­கென ஒரு வாக்கு வங்­கியை வைத்­தி­ருக்­காத பஷீர், மு.கா. மூலம் தனக்­கு கிடைக்­காத ஒரு அரசியல் அந்­தஸ்­தையே எதிர்­பார்த்துக் காத்­துக்­கொண்­டி­ரு­க்­கிறார். பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தில்லை என்று அறி­வித்­தவர் எப்­படி மீண்­டும் அர­சி­ய­லுக்குள் வருவார் என்று நீங்கள் கேட்­கலாம். மு.கா. மூலம் தனக்கு தேசி­யப்­பட்­டியல் கிடைக்­காது என்று நன்­க­றிந்த பின்­னர்தான், பஷீர் அந்த அறி­விப்பைச் செய்­தி­ருந்தார். 

2011ஆம் ஆண்டு வவு­னி­யாவில் நடை­பெற்ற மு.கா. பேராளர் மாநாட்டில் வைத்­து பஷீர், தான் இனிமேல் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் ஈடு­ப­டப்­போ­வ­தில்லை என்­று அறி­வித்­தி­ரு­ந்தார். இப்­படி அறி­விப்புச் செய்­த­வர்தான், பின்­க­தவால் சென்று முழு அமைச்சுப் பத­வியை பபெற்று அனு­­ப­வித்­து­விட்­டு, தற்­போது தேசியப்பட்­டியல் கேட்டும் கிடைக்­காத கார­ணத்­தி­னால்தான் மீண்டும் இந்த அறி­விப்பைச் செய்­திருக்­கிறார் என்­பது தெளிவா­கவே விளங்­கு­கி­ற­து. ஆகவே, அவர் மீண்டும் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் ஈடு­ப­ட­மாட்டார் என்று சொல்­ல­மு­டி­யா­து.

கட்­சியை தூய்­மைப்­ப­டுத்­தப்­போகிறோம் என்று வெளிக்­கி­ளம்­பி­யி­ருக்கும் அணி, கட்­சியை அழித்­து­விட்டு தலை­மையை கைப்­பற்றும் நோக்­கில்­தான் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. தலை­வ­ராக ரவூப் ஹக்­கீமை உச்­ச­பீடக் கூட்­டத்­தின்­போது பிரே­ரித்த ஹஸன் அலி, நிந்­தவூர் கூட்­டத்­தில்­வைத்து அதனை ஆமோதித்தும் இருக்கி­றார். மு.கா. அதி­ருப்­தி­யாளர்­களில் மிக முக்கி­ய­மான ஹஸன் அலியே, அடுத்த தலை­மைக்கு யாரும் தகு­தி­யில்லை என்பதை தெளிவாக உணர்த்­­தி­யுள்­ளார். இந்­நி­லையில் யாரை தலை­வ­ராக கொண்­டு­வ­ரு­வ­தற்கு இவர்கள் வேலை­செய்­கி­றார்கள் என்­பது குறித்து அவர்­க­ளுக்­குள்­ளேயே ஒரு தெளிவு இல்­லை. 

முஸ்லிம் காங்­கி­ரஸின் கோட்­டை­யான கிழக்கு மாகாணத்தில் அக்­கட்சி தோற்­க­டிக்­கப்­ப­டு­மாயின் அது ஒரு உரி­மைக்­கு­ரலின் அழிப்­பா­கவே பார்க்­கப்­படும். அஷ்ரப் எவ்­வ­ளவோ கஷ்­­டப்­பட்டு, உயிரைத் தியாகம் செய்து வளர்த்த ஒரு கட்­சியை தனி­ம­னித நலன்­க­ளுக்­காக அழிப்­ப­தற்கு புறப்பட்­டி­ருக்கும் கூட்டம் கட்­சியின் தியாகம் பற்றி சிந்­திக்­க­வேண்டும். ஹக்­கீ­மைத் தவிர வேறொருவர் முஸ்லிம் காங்­கி­ரஸை பொறுப்­பெ­டுத்­தி­ரு­ந்தால், கட்­சியை இந்­த­ள­வுக்கு வழி­ந­டாத்தி வந்­தி­ரு­ப்பார் என்று நான் நம்­ப­வில்­லை.

முஸ்லிம் காங்­கி­ர­ஸை கிழக்கு மாகாணத்தில் தோற்­க­டிக்க வைக்­க­வேண்­­டும் என்­ப­து­ததான் பஷீரின் இலக்கு என்­பது அவரது செயற்­பா­டு­களில் தெளிவாகத் தெரி­கி­ற­து. அதற்­கான காரியங்­க­ளையே அவர் திரை­ம­றைவில் செய்­து­கொண்­டி­ருக்­கிறார். அவர் வெளியி­டப்­போ­வ­தாக கூறும் ஆதா­ரங்­க­ளை­யும் அடக்­கி­வாசிப்­ப­தாக பேசப்­ப­டு­கி­ற­து. மு.கா. அதி­ருப்­தி­யா­ளர்­களும் கட்­சியை தோற்­க­டிக்கும் நிலைப்­­பாட்­டி­னைத்தான் கொண்­டி­ருக்­கி­றார்கள். கட்சியை தோற்­க­டித்து தலை­மைத்­து­வத்தை அகற்­ற­வேண்டும் என்­ப­துதான் இவர்­க­ளது இலக்­கு.

கிழக்கில் மு.கா. தோற்­க­டிக்­கப்­ப­டு­மானால், அமெ­ரிக்­காவில் ட்ரம்ப் எப்­படி அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டாரோ அது போன்­ற­தொரு நிலை­மைதான் கிழக்­கிலும் ஏற்­படும். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை யார் கையா­ள்­வது என்­பது விடை­காண முடி­யாத கேள்­வி­யா­கவே நீடிக்கும். தங்­க­ளுக்குள் ஒரு தெளிவு இல்­லா­த­வர்­க­ளால்எப்­படி ஒரு சமூ­கத்­து­க்கு தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யும்.

கட்­சிக்கு புதிய ஒரு­வரை தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்கு பரிந்­துரை செய்­யப்­பட்டால் அவர் ஏதோ ஒரு வகையில் மாற்றுக் கட்­சி­யுடன் அல்­லது அர­சாங்­கத்­துடன் திரை­ம­றைவில் இர­க­சிய பேச்­சு­வார்த்தை நடத்­திய ஒரு­வ­ரா­கத்தான் இரு­ப்பார். கட்­சிக்­கா­க பிற­ரிடமிருந்து எதையும் எதிர்­­பார்க்­காத ஒரு­வரை தலை­வ­ராக கொண்­டு­வாருங்கள் என்று சொன்னால், அவர்கள் போராட்டத்தை விட்­டு­விட்டு ஓட்டம்­பி­டித்­துவி­டு­­வார்கள்.

கட்­சி­யைக் குழப்­ப­­வேண்டும், அதி­கா­ரத்தை கைப்­பற்­ற­வேண்டும், மாநாடு நடை­பெ­று­வதை நிறுத்­த­வேண்டும் என்று அடிக்­கடி இர­க­சிய கூட்­டங்­களை நடத்­தி­ய­வர்­கள்தான் இந்தப் போராட்­டங்­களின் பின்னால் இருக்­கி­றார்கள் என்­பது கட்­சியின் போரா­ளி­க­ளுக்கு தெரி­யா­மலும் இல்லை. தனி­ம­னித நலன்­க­ளுக்­காக கட்­சியை அழிப்­ப­தற்கு புறப்­பட்­டி­ருக்கும் இந்தக் கூட்­டத்­துக்கு போரா­ளிகள் எந்­த­ள­வுக்கு இடம்­கொ­டுப்­பார்கள் என்­ப­தையும் சிந்­திக்­க­வேண்­டும். ஏனென்றால், மாற்றுக் கட்­சிக்­கா­ரர்கள் பணம் கொடுத்­தும் செய்யமு­டி­யா­த வேலைகளை, தொண்டர் அடிப்­ப­டையில் தானாக வந்து செய்­கின்ற போராளிகள் இருப்­ப­துதான் முஸ்லிம் காங்­கி­ரஸின் சிறப்­பி­யல்­பு.

(நன்றி: நவ­மணி 09.03.2017)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -