பாறுக் ஷிஹான்-
வேலைவாய்ப்பை துரிதமாக வழங்குமாறு கோரி யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றய தினம் (30) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணியளவில் ஒன்றுதிரண்ட பட்டாரிகள் வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த பட்டதாரிகள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.