பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம்,சீ.பி.எம். சர்வதேச நிறுவனம் என்பன இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு 28-03-2017 அன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜீ.ஜெகன் ஜீவராஜின் ஒருங்கிணைப்பில் அதன் உப தலைவர் எஸ்.எஸ்.பாக்கியராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி சர்வதேச மகளிர் தின நிகழ்வில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டு-லயன்ஸ் கழகத்தின் நிருவாக உறுப்பினர் திருமதி. டாக்டர் ரோஜினி, மட்டு –தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர், மகளிர்பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி திருமதி.என்.சுசிலா, மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஈ.வி.தர்ஷன் உட்பட இயக்குனர் சபை உறுப்பினர்களான திருமதி.மதிதரன், திருமதி.கருணாகரன், ஏறாவூர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி,சு.பிரதீபன், மட்டக்களப்பு வை.டப்ளியூ.சீ.ஏயின் தலைவி திருமதி.விஜிதா நோபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் 29 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இங்கு பெண்களினால் பல்வேறுபட்ட ஆற்றல்களை வெளிக்கொனரும் பல்வேறு கலை,கலாசார நடன நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
குறித்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் வை.எம்.சீ.ஏயின் கிராம மட்டத்திலான நுண் கடன் திட்ட அங்கத்தவர்கள், கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம் பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.