இன்று அதிகாலை வாகன விபத்தில் ஆசிரியர் நெளபர்கான் மரணம் இருவர் படுகாயம் -படங்கள்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை-கண்டி பிரதான வீதி 93ம் கட்டை சந்தியில் இன்று (10) அதிகாலை 3-45 மணியளவில் காரும் கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்
காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிபொத்தானை.இலக்கம் 228 யுனிட் 07யைச்சேர்ந்த ஆசிரியர் அலிகான் நௌபர்கான் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் ஜனாஷா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளது.

இதேவேளை கெப்வாகனத்தில் பயணித்தவர்களில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கன்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்

விபத்து தொடர்பில் கன்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -