500KG நிறை இமான் அஹ்மதின் இன்றைய நிலை.!

எஸ்.ஹமீத்-
டந்த சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தைச் சேர்ந்த, உலகிலேயே அதி கூடிய நிறை கொண்ட குண்டுப் பெண்ணான இமான் அஹமத் என்ற பெண்மணி உடல் நிறையைக் குறைக்கும் பொருட்டு இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு வரப்பட்டதும், இதற்காகத் தயாரிக்கப்பட்ட விஷேட கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் விமானத்திலிருந்து கிறேன் மூலம் இறக்கப்பட்டு, பாரிய லொறியொன்றின் மூலம் மும்பாய் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டமையும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

கடந்த செவ்வாய்க்கிழமை இமானுக்கான முதலாவது கட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக மும்பாய் சைபீ ஆஸ்பத்திரி (Saifee Hospital) வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதன்போது அவரது நிறை நூறு கிலோ கிராமினால் குறைந்திருப்பதாகவும் தொடர்ந்தும் நிறை குறைப்புக்கான சத்திர சிகிச்சைகள் இடம்பெறுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முபாஸ்ஸல் லெக்டவாளா (Dr Muffazal Lakdawala) அவர்கள் சத்திர சிகிச்சை செய்யும் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -