குளியாப்பிட்டிய - அழுத்கமை புதிய பஸ் சேவை ஆரம்பம்

ஐ. ஏ.காதிர் கான்-
குளியாப்பிட்டியவில் இருந்து அழுத்கமை வரையிலான புதிய இ.போ.ச. பஸ் சேவையொன்று திவுலப்பிட்டிய இ.போ.ச.டிப்போவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 5.30 மணிக்கு குளியாப்பிட்டிய நகரிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பஸ் வண்டி, முற்பகல் 11.30 மணிக்கு அழுத்கமை நகரைச் சென்றடையும். மீண்டும் அழுத்கமையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, குளியாப்பிட்டியவை இரவு 8.30 மணிக்கு வந்து சேரும். 

குளியாப்பிட்டியவிலிருந்து பன்னல, படல்கம, திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, கம்பஹா, கடுவெல, பத்தரமுல்ல, பிட்டகோட்டே, நுகேகொடை, களுபோவில, தெஹிவளை ஊடாக காலி வீதியை அடைந்து அழுத்கமையைச் சென்றடையும் இந்த பஸ் வண்டி, மீண்டும் இதே வழியாக குளியாப்பிட்டிய நோக்கிப் பயணமாகும். இந்த பஸ் பயணத்திற்கான ஒரு வழிக் கட்டணமாக 160 ரூபா அறவிடப்படுவதாக, திவுலப்பிட்டிய டிப்போ முகாமையாளர் எச்.பீ.அனுர சாந்த குமார தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -