மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் சம்றி அகமட் எனும் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலை

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் ரி.சம்றி அகமட் எனும் மாணவன் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மாணவனை தாக்கிய அப்பாடசாலையின் ஆசிரியர் எஸ்.ரஸீட் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிய வருகின்றது.

குறித்த ஆசிரியர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் ரி.சம்றி அகமட் எனும் மாணவன் அப்பாடசாலையின் ஆசிரியர் எஸ்.ரஸீட் என்பவரினால் கடந்த புதன்கிழமை மிக கொடூரமாக தாக்கப்பட்டு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -