கல்குடாவின் ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பிலான கருத்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரதி அமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் ஊடாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனமே எமது தொகுதிக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. பின்னர் தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் மூலமாக நமக்கான வெற்றியை தந்துள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில் நாம், கட்சியினூடான அதிகாரத்தை இழந்துள்ளோம். இருப்பினும் எதிர்காலம் எமக்கு மிகப் பிரகாசமாக அமையும் என்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது.
நமது தொகுதியின் முஸ்லீம் பிரதேச அரசியலை ஒரு கட்டமைந்த நிலைக்கு மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. சமூகத்தை நேசிப்பவர்களாலும், கட்சியின் ஆரம்ப கால போராளிகளை ஓன்று சேர்ப்பதன் ஊடாகவும் நாம் இதனை சாத்தியப்படுத்தலாம். கட்சியின் ஆரம்பகால போராளிகள், அவர்களின் பிள்ளைகள் கட்சியினூடான நலன்களை அனுபவிப்பதற்கான நுட்பங்களை நாம் வகுத்திருக்கின்றோம். அவர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். நமது கட்சியின் தலைமைக்கும், அதிகாரம் கொண்ட பொறுப்புமிக்கவர்களுக்கும், நாம் அவர்களை அடையாளம் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் காலங்களில் நமது மண்ணில் மக்களை அதிகாரம் கொண்ட பிரதிநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும், நிவாரணங்களையும் வழங்க நாம் தயாராகவுள்ளோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.