சம்மாந்துறை பொலிஸ் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள்கூடடாக ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு

யு.எல்.எம். றியாஸ் -

ம்மாந்துறை மக்களும் , சம்மாந்துறை பொலிஸ் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள்கூடடாக ஏற்பாடு செய்தசம்மாந்துறை பிரதேசத்தின் பிரதான 69வது சுதந்திர தின வைபவம்இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் பிரியலால் தலைமையில்இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கிழக்கு மாகாண பிரஜா பொலிஸ் சிரஸ்ட்டஅத்தியட்சகர் எஸ்.ஏ.கே. அரசரட்ணம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் ஆரம்பமான பிரதான ஊர்வலம் சம்மாந்துறை எம்.ஏ.அப்துல் மஜீத் மண்டபத்தை வந்தடைந்தது.

இதையடுத்து அப்துல் மஜீத் மண்டப முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிஉயிர்நீத்த சுதந்திர வீரர்களுக்காக இரண்டுநிமிட மௌனஅஞ்சலியும் செலுத்தப்பட்ட்து.

இவ் வைபவத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் , உலமாக்கள் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -