கிண்ணியா: கிராமிய வீடமைப்புக் குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் மகரூ கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராமிய வீடமைப்பு குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (07) காலை 10.00 மணியளவில் மகரூ கிராம உத்தியோகத்தரும் உளவளத்தணையாளருமான எஸ்.எம்.ஐயூப் தலைமையில் அன்வர் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்றலில் இடம் பெற்றது.இத் திட்டமானது வீடமைப்பு நிர்மாணத்தறை அமைச்சின் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெறவுள்ளமையும் இதற்கான கிராமிய வீடமைப்பைக் குழுவின் ஊடாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன இந்தக் குழுவின் நடவடிக்கை ஊடாக கிராமிய மக்களின் வீட்டுத் திட்ட மேற்பார்வைகள் யாவும் இடம் பெறவுள்ளது.

இவ் குழு அமைப்பில் மகரூ கிராம பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.உவைஸ் கிராம அதிகாரி ஐயூப் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆசிரியர் ஏ.எஸ்.மொஹமட் நஸீர் விசேடமாக சமூகப் பணி பீட மாணவர் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் பங்கேற்று பின்வருமாறு நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் அமையப் பெற்றன.தலைவராக ஏ.எஸ்.மொஹமட் நஸீர் ,செயலாளராக கே.எம்.றியாஸ் பொருளாளராக ஏ.ஆர்.சின்னலெப்பை உட்பட 08 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -