அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை ரொட்டவெவ மக்தப் மத்ரஷாவின் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (11) மௌலவி அப்துல்சத்தார் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலைக்கு சென்று கற்பதுடன் மார்க்க கல்வியினையும் ஒழுக்கங்களையும் பெற்றோர்களே கற்பிக்க வேண்டும்.தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலை காணப்படுவதினால் மாணவர்கள் வீண் விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.இரவு நேரங்களில் பாடசாலைகளில் கற்பிக்கும் பாடங்களை வீட்டில் மீட்டுவதற்கு மாணவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணையாகவும் வழிகாட்டலாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் இரவு நேரங்களில் வகுப்புக்களுக்கு அனுப்பி மாணவர்களை கஸ்டப்படுத்துவதினால் பாடசாலைகளில் கொடுக்கப்டுகின்ற வீட்டு பயிற்சிகளை செய்து முடிக்க முடியாத நிலை காணப்டுவதாகவும் மேலதிக வகுப்புக்களுக்கு மாணவர்களை இலகுவான நேரத்தில் அனுப்ப வேண்டுமெனவும் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் மௌலவி சத்தார் வேண்டுகோள் விடுத்தார்.