சவூதி அரேபியா: புனித கஃபாவை சுற்றி கட்டியுள்ள கிஸ்வா துணியை தீவைக்க முயற்சித்த குற்றத்தில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் கைகளில் ஒருவகையான எரிபொருள் காணபப்ட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நபர் சவூதியை சேர்ந்தவர் எனவும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவலாளிகளால் பிடிக்கபட்டு கைது செய்யபடுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கஃபா பக்கத்தில் தண்னைத்தானே எரித்துக் கொள்ள முயற்சித்ததாகவும் மேலதிக தகவலகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு:-