திருகோணமலையில் விபத்து - தாயும் மகளும் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் (மதகு) மோதியதில் லொறியில் பயணித்த தாயும் மகளும் காயமடைந்த நிலையில் இன்று (03) பிற்பகல் 4.30மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் அனுராதபுரம். புபுது புர பகுதியைச்சேர்ந்த பாத்திமா பஸ்மினா (30வயது) மற்றும் மகளான எம்.ஏ.ஹனா (03வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது.அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சிறிய ரக லொறியே வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் மோதியதுடன் டயர் கலன்டமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -