திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் (மதகு) மோதியதில் லொறியில் பயணித்த தாயும் மகளும் காயமடைந்த நிலையில் இன்று (03) பிற்பகல் 4.30மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் அனுராதபுரம். புபுது புர பகுதியைச்சேர்ந்த பாத்திமா பஸ்மினா (30வயது) மற்றும் மகளான எம்.ஏ.ஹனா (03வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சிறிய ரக லொறியே வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் மோதியதுடன் டயர் கலன்டமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.