எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (4) மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர, பேரமடுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் ஆற்றில் இளம் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த வேளை பற்றைக்குள் இருந்து ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த வேளை அப்பகுதியில் விரகு எடுக்கச் சென்ற ஒருவரினால் கண்டு பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.