"அஹதிய்யத்துல் தாருஸ் ஸலாம்" பாடசாலையின் விருது வழங்கும் நிகழ்வு.!

ஐ.ஏ.காதிர் கான்-
வெல்லம்பிட்டிய - சாராஸ் கார்டன் "அஹதிய்யத்துல் தாருஸ் ஸலாம்" பாடசாலையின் 16 ஆவது வருட விருது வழங்கும் நிகழ்வும், பரிசளிப்பு விழா வைபவமும், (05) ஞரயிற்றுக்கிழமை மாலை, கொழும்பு - மருதானை, டவர் மண்டபத்தில் அஹதிய்யாப் பாடசாலை அதிபர் மெளலவி ஏ. ஸனீர் தலைமையில் இடம்பெற்றது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந் நிகழ்வில், புரவலர் ஹாஷிம் உமர் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அஹதிய்யாப் பாடசாலையினால் வெளியிடப்பட்ட "அல் ஹிலால் - 2017" நினைவு மலர் முதற் பிரதியையும் அமைச்சரிடமிருந்து புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார். மாணவிகளின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -