KPC சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு டெங்கு புகை விசிறும் இயந்திரம் கையளிப்பு.!

எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை கோறைளப்பற்று பிரதேச சபையினால் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு டெங்கு புகை விசிறும் இயந்திரம் ஒன்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம் சிகாப்தீன் அவர்களினால் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா, பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் எம்.எம்.சியாம் ஆகியோர்களிடம் இன்று 31ம் திகதி பிரதேச சபையில் வைத்து கையளிக்கப்பட்டது. 

தெளி கருவி இயக்குனர் கே.கோபாலகிருஷ்னண் அவர்களினால் இயந்திரம் அனைவர் முன்னிலும் இயக்கி காண்பிக்கப்பட்டது. இவ் இயந்திரத்தினை கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கும் டெங்கு புகை விசிறுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதுடன் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மேலுமொரு இயந்திரம் பெற்றுத்தரப்படுமென பிரதேச சபை செயலாளரினால் வாக்குறுதியளிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -