எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை கோறைளப்பற்று பிரதேச சபையினால் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு டெங்கு புகை விசிறும் இயந்திரம் ஒன்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம் சிகாப்தீன் அவர்களினால் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா, பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் எம்.எம்.சியாம் ஆகியோர்களிடம் இன்று 31ம் திகதி பிரதேச சபையில் வைத்து கையளிக்கப்பட்டது.
தெளி கருவி இயக்குனர் கே.கோபாலகிருஷ்னண் அவர்களினால் இயந்திரம் அனைவர் முன்னிலும் இயக்கி காண்பிக்கப்பட்டது. இவ் இயந்திரத்தினை கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கும் டெங்கு புகை விசிறுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதுடன் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மேலுமொரு இயந்திரம் பெற்றுத்தரப்படுமென பிரதேச சபை செயலாளரினால் வாக்குறுதியளிக்கப்பட்டது.