இம்முறை நடைபெற்ற GCE உயர் தர பரீட்சையில் உயிரியல் விஞ்சான பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் நிலையையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையையும் பெற்று கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் மஹ்தி ரோஷன் அக்தர் அவர்கள் சாதனை படைத்தார்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் அவர்கள் இன்று 2017.01.08 ஆம் திகதி அம்மாணவனுடைய வீட்டிட்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதன் போது மாணவனின் தந்தை, கிண்ணியா ரீ.பி. ஜாயா வித்தியாலய அதிபர் முஸம்மில், ஆசிரியர்களான எஸ்.எல்.எம்.சித்திக், எஸ்.பைசல் ஆகியோரும் கலந்து கொண்டார்.