எம்.ஜே.எம்.சஜீத்-
அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் தரவுகள் சேகரிப்பும், விசேட கலந்துரையாடலும் எதிர் வரும் 2017.01.29 ம் திகதி காலை 09.00 மணியலவில் அட்டாளைச்சேனை அல்- முனிறா பெண்கள் உயர்தர பாடசாலையில் அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹமிட் நசுறுத்தின் தலைமையில் நடைபெறயுள்ளது.
இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையில்லா பட்டதாரிகளின் தரவுகளை சேகரிப்பதுடன், தனது பட்டபடிப்பினை முடித்த பின்பும் இது வரைக்கும் எந்த விதமான தொழில்வாய்ப்புகளையும் நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலமை காணப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சென்று முறையிடுவதாகவும், பல தீர்மாணங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார்.
மேலதிக தொடர்புகளுக்கு....
1. ஜெஸிர் மௌலவி (நிந்தவூர்) - 0771593014 / 0752948168
2. எம்.ஐ.அனஸ் (அட்டாளைச்சேனை)- 0752867987 / 0713542329