எம்.எம்.ஜபீர்-
மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கல்முனை நஜாத் கார் சேல் நிறுவனத்தின் அணுசரனையில் கொள்வனவு செய்யப்பட்ட சீருடை தொகுதி கையளிக்கும் நிகழ்வு இன்று இரவு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினரிடம் சீருடை தொகுதியை கையளித்தார்.
இதன்போது கல்முனை நஜாத் கார் சேல் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எம்.நஜாத், ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள், விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.