ஹொரவ்பொத்தான-கெப்பித்திகொள்ளாவ பிரதான வீதி வலியுபொத்தான பகுதியில் இன்று (29) பிற்பகல் வேகமாகச்சென்ற வேன் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜந்து பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜந்து இளைஞர்கள் பயணித்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்
படுகாயமடைந்தவர்கள் ஹொரவ்பொத்தானை-கிவுளக்கடை பகுதியைச்சேர்ந்த 18-22-19 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக ஹொரவ்பொத்தான பொலிஸார் விசாரணௌகளை மேற்கொண்டு வருகின்றனர்.