சுலைமான் றாபி-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று இரவு (26) மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
EP BEF 3971 எனும் இலக்கம் கொண்ட கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிள் நிந்தவூர் பிரதான வீதி களியோடைப் பாலம் அமைந்துள்ள பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியதோடு, இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் யார் யார் என்பதும், இந்த விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது பற்றி அறிய முடியாதுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பிரதான வீதியிலிருந்து ஐந்தடி பள்ளத்திலுள்ள மின்கம்பம் மற்றும் வேம்பு மரத்திற்கிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதோடு, வாகனத்தினை செலுத்தியவர்கள் பற்றி அறிய முடியாதுள்ளதாகவும், குறித்த விபத்து சம்பந்தமான விரிவான விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.