ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை (புதன்கிழமை 25.01.2017) தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிடுகையில்ளூ இன்று புதன்கிழமையிலிருந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இம்முறை இணையத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பப்பத்திரங்களை சமர்ப்பிக்க முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கையேட்டை புதன்கிழமை தொடக்கம் ஆணைக்குழு அங்கீகரித்த விநியோக முகவர்களிடமிருந்து வாங்கலாம். அன்றைய தினம் பத்திரிகைகளில் மேலதிக விபரங்கள் பிரசுரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.