இணைந்த எதிரணி எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு நுகேகொடயில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மேடையேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்திலிருந்தும் விலகி மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் இணைந்து கொள்வதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தலைவரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.
குறித்த முஸ்லிம் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் இணைந்து கொள்வது உறுதியென்றும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கத்தில் விமோசனம் கிடைக்காது என்ற அடிப்படையிலே அந்த அமைச்சர் அரசிலிருந்தும் விலகவுள்ளதாகவும் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
vv