வர்தா புயல் காரணமாக இலங்கை-இந்தியா விமான பயனம் இரத்து..!!

இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிச்செல்லும் அனைத்து இலங்கை விமானங்களும் நாளை வரை சேவையில் ஈடுப்படாது என விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வர்தா புயல் அச்சம் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி UL - 121, UL - 123, UL - 127 மற்றும் UL – 129 ஆகிய இலங்கை விமானங்களின் சேவைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானப் பயணிகள் இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையினை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -