எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவராக இல்லை. எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
தற்போது இலங்கை பாராளுமன்றில் எந்தவொரு நாட்டிலும் பின்பற்றப்படாத சம்பிரதாயம் நடைமுறையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏனெனில் சகல நாடுகளிலும் அரசாங்கத்தின் மீது மாற்று கருத்து உள்ளவர்களே எதிர்க்கட்சியாக செயற்படுகின்றனர். மேலும் தேவையான சந்தர்ப்பத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்கும் சக்தி உள்ளவர்களே எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டைப்புக்கு பாராளுமன்றில் 16 ஆசனங்களே உள்ளன. அக்கட்சிக்கு 4.6 சதவீதமான வாக்குகளே தேர்தலில் கிடைத்தது. ஆனாலும் அக்கட்சிதான் தற்போது எதிர்கட்சியாக உள்ளது.
ஆகையினால் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -