ஹொரவ்பொத்தானையில் முற்சக்கர வண்டி தீ பிடிப்பு

அப்துல்சலாம் யாசீம்-
ஹொரவ்பொத்தானை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட முற்சக்கர வண்டி பெற்றோல் கசிவு காரணமாக இன்று (12) பிற்பகல் 2.30மணியளவில் தீப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. அனுராதபுரத்திலிருந்து -கோமரங்கடவெல பிரதேசத்திற்கு உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல வருகை தந்த தமுத்தேகம பகுதியைச்சேர்ந்த பெண்ணொருரின் முற்சக்கர வண்டியெனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தீப்பற்றிய முற்சக்கரவண்டி NC AAN-6529 எனும் இலக்கமுடையது எனவும் முற்சக்கர வண்டியை செலுத்தியநபர் ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -