தொலைக்காட்சி, வானொலியைப் போன்று சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இன்று சமூக வலைத்தளங்கள் தனக்கு வேண்டியதைக் கதைக்க முடியுமான நிலையில் காணப்படுகின்றது.
வெலிமடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். நாட்டின் வானொலி, தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் இணையத்தளங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. சமுக வலைதளங்களின் ஊடாக எவ்வாறான செய்திகளையும் வெளியிட முடியும். எவ்வாறான தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்க முடியும். இதனால் சமுகத்துக்கும் தனி நபர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவற்கான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் கவனமாக கவனிக்கப்படவும் வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.