நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தனது முதலாவது மனைவி ஆஷா பெரோவுடன் சட்டரீதியாக பிரிந்துள்ளார்.இந்நிலையில் மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இரண்டாவது திருமணம் அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறவுள்ளதாக தெரிய வருகிறது.
முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்னவின் மகளும், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மனைவியுமான சேனானி ஜயரத்னவையே, மஹிந்தானந்த திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
துமிந்த திஸாநாயக்க தற்போது வரையில் அவருடைய மனைவியை சட்டரீதியாக பிரிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தானந்த அலுத்கமகே தற்போது ராஜபக்ச தரப்பில் உறுப்பினராக செயற்படுகின்ற நிலையில், தீ.மு.ஜயரத்ன மற்றும் அவரது குடும்ப பிரதிநிதிகள் மைத்திரி தரப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
இந்த திருமணத்தை தொடர்ந்து மஹிந்தானந்த அலுத்கமகே மைத்திரி தரப்பில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
ஜே.வி.பி
