”காத்தான்குடியில் நடமாடிய 18 இளைஞர்களை கைது”

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரத்தில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் வீதிகளில் நடமாடிய 18 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் காத்தான்குடியில் 4 கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்த அதேவேளை மற்றும் வீடடொன்றிலும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதன் எதிரொலியாகவே இந்த அதிரடி நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -