9வது நாளாகவும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...!

க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 9வது நாளான 04.10.2016 அன்றும் கறுப்பு கொடியை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்தவகையில் மலையகத்தில் அக்கர்ப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் குறித்த தோட்டத்தில் கறுப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை அக்கரப்பத்தனை கிரேன்லி தோட்டத்திலும் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இங்கு தொழிலாளர்கள் தேயிலை மலைகளில் கறுப்பு கொடிகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தி தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண் தொழிலாளர்கள் பாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -