மஹிந்தவின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அஞ்சல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -