கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் மாணவர்தினவிழா..!

அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர வர்த்தக கலைப்பிரிவு மாணவர்களின் ”மாணவர்தினவிழா” நிகழ்வு கடந்த சனிக்கிழமை கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் வர்த்தகப்பிரிவு பகுதித்தலைவர் யு.எல்.எம்.அபுல்ஹஸன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும், கல்லூரியின் கலை வர்த்தகப்பிரிவு வலைய அதிபர் எம்.எச்.எம்.அபுபக்கர், கலைப்பிரிவு பகுதித்தலைவர் திருமதி. எஸ்.ஜெயகுலராஜன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்லூரியின் பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட், ஏ.பி..முஜீன் , உதவி அதிபர்களான எம்.எஸ்.அலிகான், எச்.எம்.அன்வர் அலி, எம்.எம்.நிஸார்தீன், என்.எம்.எம்.முபீன், எம்.ஏ.சலாம், யு.எம்.இர்பான், எம்.எஸ்.எம்.றாபி , எம்.ஐ.அஸ்றப், ஏ.பி.செரோன் டில்ராஸ் ஆகியோர் விசேட அதிதிகளாதகவும் கலந்து கொண்டனர்.

உயர்தர வர்த்தக கலைப்பிரிவு மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ”மகிழ்ச்சி ” சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் வர்த்தக கலைப்பிரிவில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்கள், மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், பாட ரீதியாகவும், இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -