ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இவ்வருட புனித ஹஜ் கடமைக்ககா புனித மக்கா செல்லும் ஹாஜிகளை உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த புதன் கிழமை (17) பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது ஒரு தொகுதி ஹாஜிகள் சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் ஜித்தா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசி, அமைச்சின் செயலாளர் டி.ஜி. எம். வி. ஹப்பு ஆராச்சி, ஹஜ் குழுத் தலைவர் டொக்டர் ஸியாத் தாஹா, அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம், இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தின் இரண்டாவது அதிகாரி முஹமட் பின் முஹமட் அல்லாப், அலி அல்- உம்ரி , திணைக்களத்தின் அதிகாரிகள், முகவர் நிலையங்களின் அதிகாரிகள், சிறிலங்கன் எயார் லைன்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.