கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அடிக்கல் நாட்டும் விழா..!

க.கிஷாந்தன்-
கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இட நெருக்கடி காரணமாக முறையான பயிற்சி முறைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் காணப்பட்ட பயிற்சியாளர்களுக்கு கட்டிட வசதியை ஏற்படுத்தும் முகமாக புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா 11.07.2016 அன்று காலை 09 மணியளவில் நடைபெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இரதாகிருஷ்ணன் தலைமையில் இவ் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இவ்விடயம் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தமையினால் இந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இங்கு அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்காக கல்வி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 60 இலட்சம் ரூபா நிர்மாண பணிக்கென செலவிடப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இரதாகிருஷ்ணன், கலாசாலையின் அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -