கதீப் மற்றும் முஅத்தீன்மார்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும்

யூ.கே.காலிடீன், எம்.வை.அமீர்-

வருடாவருடம் சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலினால் நடாத்தப்படும் கெளரவிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக சாய்ந்தமருது - மாளிகைகாடு பள்ளிவாசல்களில் கடைமைபுரியும் கதீப் மற்றும் முஅத்தீன்மார்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தக்வா ஜூம் ஆ பள்ளிவாசலில் இன்று காலை (2016-07-05) ஆம் திகதி நடைபெற்றது

மேற்படி நிகழ்வானது சாய்ந்தமருது - மாளிகைகாடு ஜம்ய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி யூ.எல்.எம். காசிம் கபூரி தலைமையிலும் தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.எம் சதாத் பொறியியலாளரின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற நிகழ்வில் கே.எல். சியானுத்தீன் முப்தி (ஹாசிமி, நிஜாமி) அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு பொதிகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -