சாரதி அனுமதியட்டை பெறுவதற்கான பரீட்சையில் ஆள்மாராட்டம் -இரண்டு இலட்சம் பிணை

எப்.முபாரக்-

                  திருகோணமலையில் சாரதி அனுமதியட்டை பெறுவதற்கான பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த நபரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார். 

 வெருகல்,மாவடிச்சேனை,பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவர். குறித்த சந்தேக நபர் வியாழக்கிழமை (28) நண்பர் ஒருவருக்கு சாரதி அடையாள அட்டை பெறுவதற்கான பரிட்சையின் போது நண்பரின் அடையாள அட்டையினை கொண்டு சென்று பரீட்சை எழுதிய போதே மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரீட்சை மேற்பார்வையாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு சந்தேகநபரை திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 குறித்த சந்தேக நபரை பொலிஸார் வெள்ளிக்கிழமை(29) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டதோடு அடுத்த வழக்குத் தவணை ஒக்டோம்பர் மாதம் 12 நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -