திருகோணமலையில் சாரதி அனுமதியட்டை பெறுவதற்கான பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த நபரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.
வெருகல்,மாவடிச்சேனை,பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவர். குறித்த சந்தேக நபர் வியாழக்கிழமை (28) நண்பர் ஒருவருக்கு சாரதி அடையாள அட்டை பெறுவதற்கான பரிட்சையின் போது நண்பரின் அடையாள அட்டையினை கொண்டு சென்று பரீட்சை எழுதிய போதே மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரீட்சை மேற்பார்வையாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு சந்தேகநபரை திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் வெள்ளிக்கிழமை(29) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டதோடு அடுத்த வழக்குத் தவணை ஒக்டோம்பர் மாதம் 12 நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிட்டார்.