அட்டன்: தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

க.கிஷாந்தன்-

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் உத்தியோகபூர்வமாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் 10.07.2016 அன்று திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையில் ஆய்வுகூடத்தில் சகல வசதிகளும் கொண்டுள்ளது. சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இந்நிகழ்வில் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -