ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி மூதூர் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதிவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மூதூர் விஜயம் செய்வதாகவும், ஜனாதிபதியுடன் நீதி அமைச்சர் மற்றும் பிரதான அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.