தான் மஹிந்த கொள்ளையிட்டதாக கூறவில்லை - ராஜித்த சேனாரத்ன

தான் மஹிந்த கொள்ளையிட்டதாக கூறவில்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மஹிந்த ராஜபக்ஷ கழுத்தை அறுத்துக் கொள்வதாக அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து அவரிடம் வினவப்பட்டது. 

அதற்கு பதிலளித்த வேளை, ராஜபக்ஷக்களே கொள்ளையிட்டதாக தான் குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித்த கூறினார். 

மேலும், மஹிந்த கொள்ளையிட்டதாக அல்ல அவரைச் சுற்றியிருந்தவர்களே கொள்ளையிட்டதாக தான் தெரிவித்ததாகவும், அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, பாராளுமன்றத்தில் பதிலளிக்க சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பலமுறை வாய்ப்பளிப்பது ஏன் என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வினவினார். 

இதற்கு பதிலளித்த ராஜித்த பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கு பதிலளிக்க பொன்சேகாவுக்கு பிரதமர் வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -