அரச உத்தியோகத்தர்களின் விடுமுறையை இரத்து செய்வது நியாயமில்லை – பிரசன்ன

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அனைத்து அரச பணியாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

எனினும் குறித்த விடயத்தில் மாற்றம் தேவையென பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் குறித்த சீரற்ற காலநிலையால் அதிகமான அரச பணியாளர்கள் நாடு பூராகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் அவர்களது விடுமுறையை இரத்து செய்வதில் நியாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சீரற்ற காலநிலையை மையப்படுத்தி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ள அரசாங்கம், அரச பணியாளர்களான ஆசிரியர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரச பணியாளர்கள் கடமைக்கு செல்ல முடியாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என அரசாங்கம் உறுதியளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -