கேகாலை – அரநாயக்க – சாமசர கந்தையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட 144 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரநாயக்க பிரதேச செயலாளர் ஷாம் பைசர் இதனை தெரிவித்துள்ளார்.
மண்சரிவு காரணமாக 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சாமசரகந்த மண்சரிவில் புதையுண்டு உடலமாக மீட்கப்பட்டவர்களின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.
மண்சரிவில் சிக்குண்டவர்களில் இதுவரை 17 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அடையாளங்காணப்பட்ட உடலங்கள் மாத்திரம் நாளை ஹத்கம்பொல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, வரகாபொல – தொரவக – மாதெனிய வத்த பிரதேசத்தில், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த பிரதேசத்தை சேர்ந்த 8 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.