தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர்கள் 08 பேருக்கு விளக்கமறியல்..!

ஒலுவில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக காவ­லா­ளியை தாக்கி காயம் ஏற்­ப­டுத்­தி­ய­துடன் சொத்­துக்­க­ளுக்கும் சேதம் ஏற்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பான சந்­தேக நபர்­க­ளான பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் எட்டுப் பேரையும் எதிர்­வரும் 24 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான திரு­மதி நளினி கந்­த­சாமி உத்­த­ர­விட்டார்.

நேற்று முன்தினம் இவர்களை மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போதே மேற்­படி உத்­த­ரவை பிறப்­பித்தார். இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய­வ­ரு­வ­தா­வது.

இம்­மாதம் 13 ஆம் திகதி இரவு 11 மணி­ய­ளவில் பல்­கலைக்கழ­கத்­திற்குள் சத்தம் கேட்­ப­தாக அறிந்த காவ­லாளி அவ் இடத்தை நோக்கி சென்று பார்த்த போது கதவு கண்­ணா­டிகள் உடைந்து கிடப்­பதை கண்டு அங்கு நின்ற மாண­வர்­க­ளிடம் விசா­ரித்­துள்ளார். இதன்­போது ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கத்தின் போது மாண­வர்கள் பலர் சேர்ந்து காவ­லா­ளியை தாக்­கி­யுள்­ளனர்.

தாக்­கு­தலில் காய­ம­டைந்த காவ­லாளி ஒலுவில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். இச்­சம்­பவம் தொடர்­பாக பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­தினர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸார் வர்த்­தக முகா­மைத்­துவ பிரிவில் கற்கும் மாண­வர்கள் எட்டு பேரை­ நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை காலை கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மாத்தளை, கண்டி, அநுராதபுரம், அம்பாறை, தெஹியத்தக்கண்டி, ஹட்டன் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -