கடத்தப்பட்ட பெண் தப்பிக்கும் காட்சி - சி.சி.டி.வி வீடியோ

காலி மாவலகம பிரதேசத்தில் பெண்ணொருவரை கடத்திச்செல்வதற்கு முற்பட்ட நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை கடத்திச்செல்லும் போது அந்த பெண் குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.

நேற்று பிற்பகல் இவ்வாறு கடத்திச்செல்ல முற்பட்ட குறித்த பெண் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவராவார்.

மாபலகம - ஹேமால்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ணை அவரின் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி முச்சக்கரவண்டியில் ஏற்றியுள்ளனர்.

பின்னர் குறித்த இடத்தினை கடந்த பின்னரும் அந்த முச்சக்கரவண்டி நிறுத்தப்படாததினால் அந்த பெண் முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்துள்ளார்.

அந்த பெண் முச்சக்கரவண்டியில் இருந்து பாயும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி யில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

வீடியோ..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -